/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
/
புகார் பெட்டி சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
புகார் பெட்டி சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
புகார் பெட்டி சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : பிப் 03, 2025 11:43 PM

சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
அச்சிறுபாக்கம் ஒன்றியம் கடமலைப்புத்துார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சமுதாய நலக்கூடம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, துாய்மை பாரத இயக்கத்தின் கீழ், 2022 -- 23ல், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், இந்த கழிப்பறை பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், கடமலைப்புத்துார் பேருந்து நிறுத்தம் அருகே இந்த கழிப்பறை கட்டடம் உள்ளதால், பேருந்து பயணியர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், துறை சார்ந்த அதிகாரிகள் கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.
- ராஜ செல்வகணேஷ், ஒரத்தி.