/
புகார் பெட்டி
/
சென்னை
/
தனியார் மாலுக்காக மேம்பாலத்தின் கீழ் பார்க்கிங்?
/
தனியார் மாலுக்காக மேம்பாலத்தின் கீழ் பார்க்கிங்?
தனியார் மாலுக்காக மேம்பாலத்தின் கீழ் பார்க்கிங்?
தனியார் மாலுக்காக மேம்பாலத்தின் கீழ் பார்க்கிங்?
ADDED : ஜன 20, 2026 05:29 AM

அ மைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், தியேட்டர்களுடன் கூடிய பிரபல தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருவோர், கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தாமல், நெல்சன் மாணிக்கம் சாலை, கண்ணப்பன் தெரு, ரங்கராஜலு தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார சாலைகளில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
குறிப்பாக, 'நோ பார்க்கிங்' எச்சரிக்கை பலகைகள் இருந்தும், அண்ணா வளைவு மேம்பாலத்தின் கீழ் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டிய போக்குவரத்து போலீசாரே, தடுப்புகள் அமைத்து வழிவிடும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், மாலுக்காகவே சாலை வாடகைக்கு விடப்பட்டதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புத்தமித்ரன், அமைந்தகரை.

