/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
கண்காணிப்பு கேமராவை கண்காணிக்க யாருமில்லை; சாஸ்திரி ரோடு - படேல் ரோடு சந்திப்பில் கம்பத்துக்கு வந்தது 'துன்பம்'
/
கண்காணிப்பு கேமராவை கண்காணிக்க யாருமில்லை; சாஸ்திரி ரோடு - படேல் ரோடு சந்திப்பில் கம்பத்துக்கு வந்தது 'துன்பம்'
கண்காணிப்பு கேமராவை கண்காணிக்க யாருமில்லை; சாஸ்திரி ரோடு - படேல் ரோடு சந்திப்பில் கம்பத்துக்கு வந்தது 'துன்பம்'
கண்காணிப்பு கேமராவை கண்காணிக்க யாருமில்லை; சாஸ்திரி ரோடு - படேல் ரோடு சந்திப்பில் கம்பத்துக்கு வந்தது 'துன்பம்'
ADDED : ஆக 11, 2025 11:21 PM

குவிந்திருக்கும் கழிவுகள் ராமநாதபுரம், 64வது வார்டு, கணேசபுரம், சுப்பையன் வீதி, பங்கஜா மில் குடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் மரக்கிளைகள், சோபா உள்ளிட்ட பழைய பொருட்களை போட்டு சென்றுள்ளனர். சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- ராஜூ, ராமநாதபுரம்.
நாய் தொல்லை ரத்தினபுரி, 31வது வார்டு, சாதிக்பாட்ஷா வீதியில், நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வீதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக செல்கின்றன. நடந்து செல்பவர்களைநாய்கள் துரத்துகின்றன. சிறுவர்கள், முதியவர்கள் வீதிகளில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.
- சுரேஷ், ரத்தினபுரி.
மூடப்படாத குழிகள் உடையாம்பாளையம், 50வது வார்டு, வடக்கு விநாயகர் கோவில் வீதி ஒன்றில், 24 மணி நேர குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. மூன்றாவது சந்தில் பணிகளை அரைகுறையாக செய்ததுடன், தோண்டப்பட்ட குழிகளை சரியாகமூடாமல் விட்டுள்ளனர்.
- மனோகரன், உடையாம்பாளையம்.
இடிந்த பால சுற்றுச்சுவர் உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ், பாலத்தின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. இரவு நேரங்களில் பாலத்தின் ஓரத்தில் வரும் வாகனங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது. பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளால் கட்டடம் வலுவிழக்கும் அபாயமும்காணப்படுகிறது.
- நந்தகுமார், உப்பிலிபாளையம்.
போக்குவரத்திற்கு இடையூறு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 24வது வார்டு, தண்ணீர் பந்தல் ரோடு, வினோபாஜி நகருக்கு எதிரில் இருக்கும் குடியிருப்பு அருகே, மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.பத்து நாட்கள் ஆகியும்நடவடிக்கையில்லை.
-பாலு, 24வது வார்டு.
பஸ்கள் இயக்காததால் மக்கள் அவதி சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பஸ்கள் இயக்கப்படாததால், இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
- கார்த்திக், சுந்தராபுரம்.
வளைந்த கம்பம் ராம்நகர், 67வது வார்டு, சாஸ்திரி ரோடு - பட்டேல் ரோடு சந்திப்பு பகுதியில், கடந்த ஓராண்டாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட கம்பம் சேதமடைந்து, வளைந்த நிலையில் உள்ளது.
- ஸ்ரீநிவாசன், ராம்நகர்.
சாக்கடை அடைப்பு வேலாண்டிபாளையம், சாஸ்திரி ரோடு, 44வது வார்டு, ஜானகி நகரில், சரிவர துார்வாராத சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் போது கழிவுநீருடன் கலந்து, வீடுகளுக்குள் வருகிறது.
- ஜோசப், ஜானகி நகர்.
சகதியான ரோடு வீரகேரளம், டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலை வசதி அமைத்து தரவில்லை. மண்ணாக இருக்கும் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாகிறது. வாகனங்களின் சக்கரங்கள் மாட்டிக்கொள்கின்றன. சகதியான சாலையில் நடந்து செல்லவும் முடியவில்லை.
- காயத்ரி, வீரகேரளம்.
பார்க்கிங்கால் நெருக்கடி பீளமேடு, ஆரியபவன் ஓட்டல் எதிரே பாலத்திற்கு அடியில் வரிசையாக கார்கள் பார்க் செய்யப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- துரை, பீளமேடு.
போக்குவரத்து நெரிசல் பொள்ளாச்சி ரோடு, காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே 'யூ டர்ன்' பகுதியில் போக்குரவரத்து நெரிசல் ஏற்படுவதுடன்; தொடர் விபத்துகளும் நடக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணி அமர்த்த வேண்டும்.
- சந்திரன், காந்தி நகர்.
துார்வாராத சாக்கடை சிங்கநால்லுார் பேருந்து நிலையம் எதிரில், ஆர்.வி.எல்., மேற்கு காலனி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சாக்கடை துார்வாரவில்லை. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
- செந்தில்குமார், சிங்காநல்லுார்.
ஆமைவேகத்தில் சாலைப்பணி கவுண்டம்பாளையம், குப்பைகோணம்புதுார், அன்னை இந்திரா நகரில் சாலையில் திறந்த நிலையில் கழிவுநீர்செல்கிறது. கடந்த டிச., மாதம் துவங்கிய சாலைப்பணிகளையும் முடிக்கவில்லை. ஆக்கிரமிப்பால் சாலையை பயன்படுத்த முடியவில்லை.
- பாலாஜி, கவுண்டம்பதாளையம்.