sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கோயம்புத்தூர்

/

ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்'; ஆம்புலன்ஸ் செல்வதில் சிக்கல்

/

ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்'; ஆம்புலன்ஸ் செல்வதில் சிக்கல்

ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்'; ஆம்புலன்ஸ் செல்வதில் சிக்கல்

ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்'; ஆம்புலன்ஸ் செல்வதில் சிக்கல்


ADDED : ஜூலை 27, 2025 09:02 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதரில் அறிவிப்பு பலகை வால்பாறை ---- பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில், புதுத்தோட்டம் அருகே ரோட்டோரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகள், பல இடங்களில் புதரில் மறைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அறிவிப்பை கவனிக்காமல் சென்று விபத்துக்குள்ளாகின்றனர். இதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனித்து புதரை அகற்றி, சுத்தப்படுத்த வேண்டும்.

-- சரண்யா, வால்பாறை.

கூடுதல் பஸ் தேவை பொள்ளாச்சி, ருக்குமணியம்மாள் பள்ளி வழியாக, காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- கண்ணன், பொள்ளாச்சி.

வடிகாலை சரி செய்யணும்! கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, மழை நீர் கால்வாயில் செல்லாமல் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளி மாணவர்கள் ரோட்டில் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, மழை நீர் செல்லும் கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

-- சந்தோஷ், கிணத்துக்கடவு.

போர்வெல் பழுது கிணத்துக்கடவு, பெரியார்நகரில் இருக்கும் போர்வெல் கடந்த சில நாட்களாக பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால். அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவைக்கு சிரமப்படுகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

-- பாபு, கிணத்துக்கடவு.

ரோட்டோரத்தில் 'பார்க்கிங்' பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன், ரோட்டோரம் அதிகளவு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரோட்டோரத்தில், வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- டேவிட், பொள்ளாச்சி.

ஆபத்தை உணராத மக்கள் உடுமலை பழைய பஸ் ஸ்டாண்டுக்கும் புதிய பஸ் ஸ்டாண்டிற்கும் இடையே ஆபத்தாக ரோட்டை பயணியர் கடந்து செல்கின்றனர். இதை யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே, இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகேசன், உடுமலை.

ரோட்டில் ஆக்கிரமிப்பு உடுமலை, பசுபதி வீதியில் வணிக கடைகளின் பொருட்கள் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்படுகின்றன. ரோட்டின் பாதி வரை கடைகளின் பொருட்களாக இருப்பதால் வாகன நிறுத்த இடமில்லாமல் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன. இதனால் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

- ரங்கநாதன், உடுமலை.

இருளில் பழனியாண்டவர் நகர் உடுமலை, பழனியாண்டவர் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளன. மாலை நேரங்களில் அவ்வழியாக செல்லும் மக்கள் திருட்டு பயத்துக்கு ஆளாகின்றனர். மேலும் இரவில் இருள் சூழ்ந்திருப்பதால், தெருநாய்கள் வாகன ஓட்டுநர்களை துரத்தி சென்று விபத்துக்குள்ளாக்குகின்றன.

- ரேவதி, உடுமலை.

குப்பை எரிப்பு உடுமலை, சின்னவீரம்பட்டி ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகளை வைத்து எரிக்கின்றனர். காற்று பலமாக இருப்பதால், கழிவுகளிலிருந்து தீப்பொறிகளும் பறந்து வருகின்றன. மேலும், ரோட்டில் புகை மண்டலமாக மாறி எதிரே வரும் வாகனங்களும் தெரியாத வகையில் பரவுகிறது. வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

- மூர்த்தி, உடுமலை.

போக்குவரத்து நெரிசல் உடுமலை சீனிவாசா வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சிறிய வாகனங்களும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகின்றன. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

- மகாலட்சுமி, உடுமலை.

விழிப்புணர்வு தேவை உடுமலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் செல்கின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

- செல்வம், உடுமலை.






      Dinamalar
      Follow us