பாதுகாப்பு வேலி அமைக்கப்படுமா ?
தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள சையது குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
-சித்ரா, தியாகதுருகம்.
தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பின்புறம் உள்ள சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-ஷபியுல்லா, கள்ளக்குறிச்சி.
சிக்னல் தேவை
தியாகதுருகம் பஸ் நிலைய எதிரே திருக்கோவிலுார் சாலை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் அமைக்க வேண்டும்.
-முருகன், தியாகதுருகம்.
சாலையோரம் குப்பைகள்
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
-பாலாஜி, கள்ளக்குறிச்சி.
நெடுஞ்சாலையில் விபத்து அதிகரிப்பு
மூங்கில்துறைப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் விபத்து அதிகரித்து வருகிறது.
-மணிகண்டன், மூங்கில்துறைப்பட்டு.
பயிர்கள் பாதிப்பு
கடுவனுாரில் நான்கு வழிச்சாலை பணியின் போது ஏரியில் இருந்து வெளியேறும் கால்வாய் மூடப்பட்டதால் விவசாய பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-சிவராஜ், கடுவனுார்.
ஏரியில் குப்பை கொட்டும் அவலம்
எலவனாசூர்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
-சிங்காரம், தியாகதுருகம்.