குப்பையால் சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
-பாலாஜி, கள்ளக்குறிச்சி.
வாகன ஓட்டிகள் அவதி
ஏமப்பேர், பைபாஸ் சாலை சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-ஆனந்தன், ஏமப்பேர்.
பயணிகள் பாதிப்பு
சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-ஸ்ரீராம், சங்கராபுரம்.
சாலை சீரமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் கிராமத்திற்கு செல்லும் தார்சாலை கரடு முரடாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-ஹரிகிருஷ்ணன், காரனுார்.
கஞ்சாவை தடுக்க நடவடிக்கை
திருக்கோவிலுார், கபிலர் மேல்நிலைப்பள்ளி சுற்று சுவர் நெடுகிலும் பெட்டிக்கடைகள் ஆக்கிரமிப்பால், பள்ளி மாணவர்களுக்கு ரகசியமாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதாக கிடைக்கும் அபாயம் உள்ளது.
-கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி.