நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு
சின்னேசலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் பாசன வாயக்காலை தனி நபர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
-முரளி, பங்காரம்.
பஸ் வசதியின்றி அவதி
உளுந்துார்பேட்டை - கிளியூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-உதயகுமார், ரகுநாதபுரம்.
நெடுஞ்சாலையோரம் குப்பைகள்
எலவனாசூர்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
-திருமால், எலவனாசூர்கோட்டை.
சாலை விரிவாக்கம்: விபத்து அபாயம்
மூங்கில்துறைப்பட்டில் சாலை விரிவாக்க பணி முழுமையாக முடியாதாதல் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
-ராஜா, மூங்கில்துறைப்பட்டு.
குண்டும் குழியுமான சாலை
ஆற்கவாடி - ஈருடையாம்பட்டு சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக இருப்பதால் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-ராஜா, ஆற்கவாடி.