ADDED : ஜூன் 09, 2025 11:22 PM
கழிவுநீரால் மக்கள் அவதி
திருக்கோவிலுார் அண்ணா நகரில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-கிருஷ்ணன், திருக்கோவிலுார்
ஆக்கிரமிப்பில் பயணியர் நிழற்குடை
திருக்கோவிலுார் பஸ் நிலைய கடைகளில் பயணிகள் நிற்கும் இடத்தை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
-ராமன், திருக்கோவிலுார்.
ஆட்டோக்களால் அவதி
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தை சுற்றிலும் சாலைகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
-பாலாஜி, கள்ளக்குறிச்சி.
பாதுகாப்பற்ற உணவுகள்
உளுந்துார்பேட்டை உணவகங்களில் பாதுகாப்பற்ற முறையில் சமைக்கப்படும் உணவுகள் வழங்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லட்சுமணன், உளுந்துார்பேட்டை
சாலை ஆக்கிரமிப்புகள்
கச்சிராயபாளையம் முக்கிய சாலைகளில் கடைக்காரர்கள் வணிக பொருட்களை வரிசையாக அடுக்கி ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
-குமார், கச்சிராயபாளையம்
சாலையோர குப்பைகள்
மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை முன் சாலைகளில் தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கிறது.
-பாபு, மூங்கில்துறைப்பட்டு