sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புகார் பெட்டி.....

/

புகார் பெட்டி.....

புகார் பெட்டி.....

புகார் பெட்டி.....


ADDED : ஜூலை 30, 2024 06:58 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எச்சரிக்கை பலகையை

சூழ்ந்த புதர்கள்

சோழவரம் அடுத்த காரனோடை ஆற்று மேம்பாலம் அருகே, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை மற்றும் காரனோடை பஜார் பகுதி செல்லும் சாலை சந்திக்கும் இடம் உள்ளது.

இச்சாலை சந்திப்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், எச்சரிக்கை பலகையை முள்புதர் சூழ்ந்து மறைத்துள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் முன்கூட்டியே சாலை சந்திப்பு இருப்பதை அறிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர்.

எனவே, எச்சரிக்கை பலகையை சூழ்ந்துள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.முரளி, சோழவரம்.

பூந்தமல்லியில்

குதிரை தொல்லை

பூந்தமல்லி நகராட்சியின் 21வது வார்டில், 80,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், இங்கு குடியிருப்பு பகுதியில் 20க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித் திரிகின்றன.

குடியிருப்பு பகுதி, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தில் சுற்றும் குதிரைகளால் மாணவர்கள், பொதுமக்கள் பீதியடைகின்றனர்.

நெடுஞ்சாலையில் சுற்றும் குதிரைகளால், அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில் நடந்து செல்வோரையும் முட்ட வருகின்றன. சில நேரம், காலால் உதைப்பதால், பகுதிவாசிகள் காயமடைகின்றனர்.

எனவே, பூந்தமல்லியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள குதிரைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சாந்தி கிருஷ்ணா, 35, பூந்தமல்லி.






      Dinamalar
      Follow us