/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி ; சாமிரெட்டிகண்டிகையில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்
/
புகார் பெட்டி ; சாமிரெட்டிகண்டிகையில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்
புகார் பெட்டி ; சாமிரெட்டிகண்டிகையில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்
புகார் பெட்டி ; சாமிரெட்டிகண்டிகையில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்
ADDED : பிப் 17, 2025 11:05 PM
கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை பகுதியில், முனுசாமி நகர், பெரியார் நகர், பூபால் நகர், ஸ்ரீராம் கார்டன், சபரி கார்டன் என, 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அங்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டும் என்றால், 2 கி.மீ., தொலைவில்,கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
மேற்கண்ட குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, மைய பகுதியான பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில், ஏதேனும் ஒரு வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும்.
- எஸ்.சதானந்தன், கும்மிடிப்பூண்டி.

