sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

மது அருந்தும் கூடமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்

/

மது அருந்தும் கூடமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்

மது அருந்தும் கூடமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்

மது அருந்தும் கூடமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்


ADDED : ஜூலை 18, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெருவிளக்கு எரிவதில்லை

திருப்பூர், உழவர் சந்தை பின், ஏ.பி.டி., ரோட்டில் இரண்டு வாரங்களாக தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப் படுகிறது.

- மணியன், கருவம்பாளையம்.

சாலையை சீரமைக்கலாமே

திருப்பூர், அங்கேரிபாளையம் விரிவு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

- விஜி, கூட்டுறவு நகர்.

n திருமுருகன்பூண்டி, பெருமாள் கோவில் அருகே, சாலையின் இடது புறம் சேதமாகியுள்ளது. எதிரெதிரே வாகனம் வரும் போது தடுமாற வேண்டியுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.

- விஜயலட்சுமி, திருமுருகன்பூண்டி.

வேகத்தடை வேண்டும்

நெருப்பெரிச்சல், பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலை வளைவில் வாகனங்கள் தாறுமாறாக பயணிக்கிறது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வேகத்தடை அமைக்க வேண்டும்.

- ஈஸ்வரமூர்த்தி, நெருப்பெரிச்சல்.

பணிகள் மந்தம்

கணபதிபாளையம் - அல்லாளபுரம் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. குழாய் உடைப்பை சரிசெய்தவர்கள், சரிவர மண் போட்டு சாலையை சீரமைக்கவில்லை. மண் குவியலாக உள்ளது.

- ஸ்ரீ தரன், கணபதிபாளையம்.

போலீசார் கவனத்துக்கு...

திருப்பூர், காந்தி நகர் பஸ் ஸ்டாப்பில் மது அருந்தி விட்டு அங்கேயே துாங்குகின்றனர். இப்பகுதியில் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தி, 'குடி'மகன்களிடம் இருந்து, பஸ் ஸ்டாப்பை மீட்க வேண்டும்.

- நட்ராஜன், காந்திநகர்.

கால்வாய் அடைப்பு

அவிநாசி அருகே தேவராயம் பாளையம், பிள்ளையார் கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

- சண்முகம், தேவராயம்பாளையம்.

சேதமாகும் சாலை

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் உழவர் சந்தை ஸ்டாப் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையும் சேதமாகி வருகிறது.

- செல்வராஜ், தென்னம்பாளையம்.






      Dinamalar
      Follow us