sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

பீறிடும் தண்ணீர்... நாறிடும் நகரம்

/

பீறிடும் தண்ணீர்... நாறிடும் நகரம்

பீறிடும் தண்ணீர்... நாறிடும் நகரம்

பீறிடும் தண்ணீர்... நாறிடும் நகரம்


ADDED : ஜூன் 17, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆபத்தான மரம்

பொங்குபாளையம், ஏ.டி., காலனி, மாரியம்மன் கோவில் வீதியில் முற்றிலும் காய்ந்து விழும் நிலையில் வேப்பமரம் உள்ளது. விழும் முன் அகற்ற வேண்டும்.

- நாகராஜ், பொங்குபாளையம். (படம் உண்டு)

ஒளிராத விளக்கு

திருப்பூர், 26வது வார்டு, கொங்கணகிரி கோவில் வீதி - பிரேமா ஸ்கூல் வீதி சந்திப்பு மேற்கு வீதியில் ஒரு வாரமாக தெருவிளக்கு எரிவதில்லை.

- பழனிச்சாமி, காலேஜ் ரோடு. (படம் உண்டு)

அகலாத குப்பை

திருப்பூர், தாராபுரம் ரோடு, ெஷரீப் காலனி எக்ஸ்டன்சன், ஈஸ்வரமூர்த்தி நகர், நடுப்பங்குதோட்டம், குறிஞ்சி நகரில் தேங்கும் குப்பைகள் அகற்றப்படாமல், அப்படியே கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

- தனுஷ், குறிஞ்சி நகர். (படம் உண்டு)

திருப்பூர், மூன்றாவது வார்டு, பண்ணாரி அம்மன் நகர் - பிரியங்கா நகர் ரோட்டில் குப்பை தேங்கியுள்ளது. குப்பைகளை அள்ள வேண்டும்.

- சுப்ரமணி, பண்ணாரி அம்மன் நகர். (படம் உண்டு)

திருப்பூர், 43வது வார்டு, எருக்காடு மூன்றாவது வீதியில் குப்பை தேங்கியுள்ளது. கால்வாயில் நிறைகிறது. குப்பை அள்ள வேண்டும்.

- பழனிசாமி, எருக்காடு. (படம் உண்டு)

திருப்பூர், லட்சுமி நகர், முல்லை வீதி கார்னரில் குப்பை அகற்றாமல் அப்படியே உள்ளது. வாகனங்கள் சென்று வர வழியில்லை. குப்பை அள்ள வேண்டும்.

- முத்துக்குமார், முல்லை நகர். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருமுருகன்பூண்டி முதல் வார்டு நெசவாளர் காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.

- மனோகர், அண்ணா காலனி. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லுார், பிரபு நகரில் குழாய் உடைந்து தண்ணீர் தினசரி சாலையில் வீணாகிறது. சாலையும் சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- மணிமேகலை, பிரபுநகர். (படம் உண்டு)

திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜவஹர் நகர் முதல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. உடைப்பு மேலும் பெரியதாகும் முன், சரிசெய்ய வேண்டும்.

- கார்த்தி, ஜவஹர் நகர். (படம் உண்டு)

திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் பிரிவு, குளத்துப்புதுார் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.

- ரத்தினசாமி, குளத்துப்புதுார். (படம் உண்டு)

ரியாக் ஷன்

தற்காலிக சீரமைப்பு

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் கடக்கும் சாலை குழியாக இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தற்காலிகமாக குழிக்கு மண் கொட்டியுள்ளனர்.

- சங்கர்சதீஷ், புதுராமகிருஷ்ணாபுரம். (படம் உண்டு)

குப்பைகள் மாயம்

திருப்பூர், ஜெய்வாபாய் ஸ்கூல் வீதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் குப்பை தேங்கியிருப்பதாக செய்தி வெளியானது. அவ்விடத்தில் இருந்து குப்பை அள்ளப்பட்டு விட்டது.

- சத்யன், குமரன் ரோடு (படம் உண்டு)

ஒளிர்கிறது விளக்கு

பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி மீனாம்பாறையில் தெருவிளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது. தெருவிளக்கு மாற்றி விட்டனர்; தற்போது பளிச்சிடுகிறது.

- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு)

இருக்கைகள் மாற்றம்

கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப் நிழற்குடையில் போஸ்டர் ஓட்டி, அசுத்தம் செய்திருந்தனர். இருக்கைகள் உடைந்திருந்தது. செய்தி வெளியானதும், இருக்கை மாற்றப்பட்டுள்ளது. சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு, துாய்மைப்படுத்தப் பட்டுள்ளது.

- செல்வராஜ், பல்லடம் ரோடு. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us