sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

நடைமேடை 'தடை'யாக மாறலாமா?

/

நடைமேடை 'தடை'யாக மாறலாமா?

நடைமேடை 'தடை'யாக மாறலாமா?

நடைமேடை 'தடை'யாக மாறலாமா?


ADDED : ஆக 25, 2025 12:47 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியாத விளக்குகள்

மாநகராட்சி இரண்டாவது மண்டலம், நெருப்பெரிச்சலில், மாநகராட்சி வரி வசூல் மையம் அருகே, ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

- ராமமூர்த்தி, நெருப்பெரிச்சல்.

குப்பை தேக்கம்

வளையங்காடு தெற்கு, வ.உ.சி., நகரில், ஒரு மாதத்துக்கும் மேலாக குப்பை அள்ளப்படாமல், பல நாட்களாக தேங்கி கிடக்கிறது. காற்று மாசு ஏற்படுகிறது.

- பிரசாந்த் சரவணன்,திருமுருகன்பூண்டி.

n திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, வடக்கு உழவர் சந்தை பகுதியில், ரோட்டில் குப்பை குவிந்துள்ளது. 40 அடி அகல ரோட்டில், 30 அடி வரை கழிவுகள் தேங்கிகிடக்கின்றன. பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்ல முடிவதில்லை. சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது.

- பாலாஜி, நீதியம்மாள் நகர்.

n மாநகராட்சி முதல் வார்டு, அன்னையம்பாளையத்தில், அங்கன்வாடி மையம் அருகே, குப்பை கொட்டப்பட்டுவருகிறது. இதனால், அங்கன்வாடி குழந்தைகளின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. பெற்றோர், அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப தயங்குகின்றனர். அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும்.

-ராஜாமணி, அன்னையம்பாளையம்.

n மாநகராட்சி 51வது வார்டு, குறிஞ்சிநகர் விரிவு பகுதியில், குப்பை தேங்கியுள்ளது. அருகாமை பகுதி மக்களின் சுகாதாரம் பாதிக்கும் அபாயம் தொடர்கிறது. குப்பை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

- மணிகண்டன், குறிஞ்சி நகர் விரிவு.

குப்பைக்கு தீவைப்பு


வீரபாண்டியில் இருந்து கல்லாங்காடு செல்லும் ரோட்டில், குப்பைகள் தேங்கியுள்ளன. அவற்றுக்கு தீ வைப்பதால், புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசுபடுகிறது. அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

- சிதம்பரகுமார், கல்லாங்காடு.

தெருநாய்த் தொல்லை


பாண்டியன் நகர், அன்னை சத்யா காலனியில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், கிழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- நரேந்திரகுமார், பாண்டியன் நகர்.

வீணாகிறது குடிநீர்


திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி வீதியில், குடிநீர் குழாய் உடைத்து ஒருவாரமாக தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்கவேண்டும்.

- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.

போக்குவரத்து இடையூறு


மாநகராட்சி 32வது வார்டு, டி.பி.ஏ., காலனியில் போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டின் இருபுறமும் கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவைக்கின்றனர். போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-- பழனியப்பன், ஏ.டி., வீதி.

சீர்கெட்ட சுகாதாரம்


திருப்பூர், புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதி நடை மேடையில், குப்பைகள், பழைய பேனர், தண்ணீர் பாட்டில், உணவுக்கழிவுகள் சிதறி கிடக்கின்றன. சுகாதாரமில்லாததால், நடைமேடையை பயன் படுத்த முடிவதில்லை.

-மாரிமுத்து,காதர்பேட்டை.






      Dinamalar
      Follow us