sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

'திடம்' இல்லாத திடக்கழிவு மேலாண்மை

/

'திடம்' இல்லாத திடக்கழிவு மேலாண்மை

'திடம்' இல்லாத திடக்கழிவு மேலாண்மை

'திடம்' இல்லாத திடக்கழிவு மேலாண்மை


ADDED : செப் 01, 2025 12:26 AM

Google News

ADDED : செப் 01, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதம் பார்க்கிறது

மாநகராட்சி 17வது வார்டு, ஜே.பி., நகர் மெயின் ரோட்டில், முட்செடிகள் வளர்ந்து ரோட்டோரம் பரவி நிற்கின்றன. முட்செடிகள் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

- ரஞ்சித், திருப்பூர்.

தெரு இருள்மயம்

கொடுவாய் மகரிஷி நகரில் உள்ள தெரு விளக்கு உடைந்து 10 நாட்களுக்கு மேலாகிறது. தெருவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.- தாமு, கொடுவாய்.

கடும் துர்நாற்றம்

மங்கலம் ரோடு, செங்குந்தபுரம் 2வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக கழிவு நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- கதிர், செங்குந்தபுரம்

சாலை சிதிலம்மங்கலம் ரோடு, தீயணைப்பு நிலையம் வழியாக உள்ள ஜம்மனை ரோடு சிதிலமடைந்து பல நாட்களாக காணப்படுகிறது. வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவுகிறது. - வின்சென்ட்ராஜ், ராயபுரம்.

மணலால் ஆபத்து

அங்கேரிபாளையம் பகுதியில் விக்னேஸ்வரா பள்ளி எதிரேயுள்ள ரோட்டில் மணலைக் கொட்டி குவித்து வைத்துள்ளனர். வாகனங்கள் செல்வதால் ரோடு முழுவதும் பரவி, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

- சுரேஷ், அங்கேரிபாளையம்.

தரம் பிரிக்காமல்...

மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட டி.பி.ஏ., காலனி பகுதியில் வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வாங்குவதில்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்த வேண்டும். - குமரசேன், டி.பி.ஏ., காலனி.

சாலையில் கழிவுநீர்

முதலிபாளையம் ஊராட்சி, சிட்கோ வளாகம் எதிரேயுள்ள ஜி.வி.என்., நகரில் கழிவு நீர் வடிகால் வசதியில்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் சென்று பாய்கிறது. வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு ரோடும் சேதமாகிறது.

- கார்த்தி, வெள்ளக்கரடு.

மாநகராட்சி 41வது வார்டு முருகம்பாளையம், சூரிய கிருஷ்ணா நகர், வீதிகளில் சாக்கடை கழிவு நீர் பாய்ந்தோடுகிறது. சாக்கடை கால்வாயைச் சரி செய்ய வேண்டும்.

- கேசவன், முருகம்பாளையம்.

சாலை மோசம்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு, எஸ்.வி., காலனி கிழக்கு 2வது வீதியில் உள்ள ரோடு மோசமாக உள்ளது. பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. உடனடியாக அதை சீரமைக்க வேண்டும்.

- செந்தில்குமார், எஸ்.வி., காலனி.

குப்பைக்குத் தீ

மாநகராட்சி ஆறாவது வார்டு பகுதியில், பாலன் நகர், பொம்மநாயக்கன்பாளையத்தில் குப்பைகளைக் கொட்டி துாய்மைப்பணியாளர்கள் தீ வைத்து விடுகின்றனர். சுற்றுப்பகுதியில், புகை சூழ்ந்து சிரமம் நிலவுகிறது.

- முருகேசன், பாலன் நகர்.

அகலாத குப்பை

திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தை முன்புறம் பெருமளவு காய்கறி கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால், சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, ஏராளமான பூச்சியினங்கள் காணப்படுகின்றன.

- மனோஜ்குமார், திருப்பூர்.

----

ரியாக்ஷன்

ரோடு சீரமைப்பு

மாநகராட்சி 7வது வார்டு குருவாயூரப்பன் நகர் பகுதியில் ரோடு மோசமாக உள்ளது குறித்து 'தினமலர்' நாளிதழில் புகார் வெளியானது. உடனடியாக அதை சீரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

- குமரேசன், குருவாயூரப்பன் நகர்.

குப்பை அகற்றம்வளையன்காடு, வ.உ.சி., நகர் தெற்கு பகுதியில் குப்பைகள் அகற்றாமல் தேங்கிக்கிடந்தன. இதுகுறித்த செய்தி வெளயிடப்பட்டது. இதையடுத்து உடனடியாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன.

- பிரசாந்த் சரவணன், வளையன்காடு.






      Dinamalar
      Follow us