sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

சாலையில் பாயும் கழிவுநீர்; பாவம்... பொதுமக்கள்

/

சாலையில் பாயும் கழிவுநீர்; பாவம்... பொதுமக்கள்

சாலையில் பாயும் கழிவுநீர்; பாவம்... பொதுமக்கள்

சாலையில் பாயும் கழிவுநீர்; பாவம்... பொதுமக்கள்


ADDED : ஆக 10, 2025 10:41 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாக்கடை அடைப்பு

தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் கழிவுகள் தேங்கி அடைத்துக் கிடக்கிறது. கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் அதிகரித்துள்ளது.

- காயத்ரி, தென்னம்பாளையம்.

குப்பை மலை

திருப்பூர் ரயில்வே பீடர் ரோட்டில், குப்பை கழிவுகளை கொண்டு வந்து மலை போல் குவித்து வைத்துள்ளனர். ரோட்டில் வாகனங்கள் செல்லக் கூட வழியில்லாத நிலை உள்ளது.

- ஹரிஷ், திருப்பூர்.

மழைநீர் தேக்கம்

லட்சுமி நகர் பிரதான ரோடு, நீண்ட நாட்களாகவே பழுதடைந்து காணப்படுகிறது. மழை நாட்களில், கழிவு நீரும் சேர்ந்து ரோட்டில் தேங்கி அவதி ஏற்படுத்துகிறது.

- தவுபீக், லட்சுமி நகர்.

குழாய் சேதம்

தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு அருகே குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதில் வெளியேறும் குடிநீர் சாக்கடை கால்வாயில் வீணாகச் செல்கிறது.

- மீனாட்சி சுந்தரம், புதுார் பிரிவு.

சாலை சீராகுமா?

அவிநாசி ரோட்டில் உள்ள குமார் நகர் கிழக்கு முதல் வீதியில் குழாய் பதிக்க தோண்டிய குழி முறையாக மூடி ரோடு போடாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

- விஜி, கூட்டுறவு நகர்.

தளம் சேதம்

பாளையக்காடு, கோல்டன் நகர் ரயில்வே பாலம் அருகே, கான்கிரீட் தளம் சேதமடைந்து உள்ளது. வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது.

- ராமச்சந்திரன், கோல்டன் நகர்.

சாலை மோசம்

திருப்பூர் மங்கலம் ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் ஏ.பி.டி., ரோட்டில் குழாய் பதிக்க ரோட்டின் குறுக்கில் தோண்டிய குழி முறையாக மூடப்படாமல் உள்ளது. இதனால், வாகனப் போக்குவரத்து சிரமமாக உள்ளது.

- மனோஜ்குமார், திருப்பூர்.

குப்பை தேக்கம்

சூசையாபுரம், காலனி பகுதியில் ரோட்டோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. அப்பகுதியைக் கடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது.

- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.

பாயும் கழிவு நீர்

பல்லடம் ரோடு, சுலோச்சனா மில்ஸ் அருகே, சாக்கடை கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் பாய்கிறது. இதனால், கடைக்காரர்கள், பாதசாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

- சுரேஷ்குமார், பல்லடம் ரோடு.

குப்பை தேக்கம்

வேலம்பாளையம் ரோட்டில், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பல நாட்களாக குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. பள்ளி மாணவர்கள், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

- ரவி, கணியாம்பூண்டி.

செல்ல வழியில்லை

மங்கலம் ரோடு, செங்குந்தபுரம், 6 வது வீதியில் கழிவு நீர் கால்வாய் கழிவுகள் தேங்கி அடைத்துக் கிடக்கிறது. கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.

- தேவிபிரியா, ெசங்குந்தபுரம்.

கடப்பதில் சிரமம்

கொங்குமெயின் ரோடு, திருநீலகண்டபுரம் 2வது வீதியில் கழிவு நீர் ரோட்டில் பாய்ந்து செல்கிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் இந்த இடத்தைக் கடந்து செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர்.

- கோபாலகிருஷ்ணன், கொங்கு மெயின் ரோடு.

* ரியாக் ஷன்

ஒளிர்கிறது

தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி சந்திப்பில் மின் விளக்குகள் இல்லாதது குறித்து புகார் வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன.

- கார்த்தி, ஊத்துக்குளி.






      Dinamalar
      Follow us