/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'
/
கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'
ADDED : ஜூன் 25, 2025 11:52 PM

சுகாதார சீர்கேடு
கணக்கம்பாளையம் - பொங்குபாளையம் வழி ஆர்.எஸ்., புரம் பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- நாகராஜ், பொங்குபாளையம் (படம் உண்டு)
சாலை சேதம்
காங்கயம் ரோடு, டி.எஸ்.கே., மருத்துவமனை எதிரே கதிர் நகரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.
- கண்ணன், கதிர் நகர். (படம் உண்டு)
ஒளிராத விளக்கு
திருப்பூர், பி.என்., ரோடு, மூம்மூர்த்தி நகர் பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- கிருபானந்தன், மும்மூர்த்தி நகர். (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
திருப்பூர், முதல் வார்டு, இந்திரா நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- விக்னேஸ்வரன், இந்திரா நகர். (படம் உண்டு)
திருப்பூர், நெருப்பெரிச்சல் சாலையில் பாதி வரை மண் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். மண்ணை அகற்ற வேண்டும்.
- விஜி, நெருப்பெரிச்சல். (படம் உண்டு)
இதுவா சீரமைப்பு?
கருவம்பாளையம், மாகாளியம்மன் கோவில், நாதன் மாவு மில் விரிவு அருகே சாலை சரிந்து விடாமல் இருக்க, கற்கள் வைத்து அடுக்கப்பட்டுள்ளது. கற்களை அகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும்.
- ஆனந்தராஜா, கருவம்பாளையம். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், 39வது வார்டு, ஜெய் நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- ராஜா, ஜெய் நகர். (படம் உண்டு)
கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் வழியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.
- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு) திருப்பூர், 55வது வார்டு, தெய்வானையம்மாள் லே-அவுட் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- கோமதி, தெய்வானையம்மாள் லே-அவுட். (படம் உண்டு)
ரியாக் ஷன்
சுத்தமானது கால்வாய்
திருமுருகன்பூண்டி முதல் வார்டு, நெசவாளர் காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- மனோகர், நெசவாளர ்காலனி. (படம் உண்டு)