sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'

/

கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'

கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'

கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'


ADDED : ஜூன் 25, 2025 11:52 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுகாதார சீர்கேடு

கணக்கம்பாளையம் - பொங்குபாளையம் வழி ஆர்.எஸ்., புரம் பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- நாகராஜ், பொங்குபாளையம் (படம் உண்டு)

சாலை சேதம்

காங்கயம் ரோடு, டி.எஸ்.கே., மருத்துவமனை எதிரே கதிர் நகரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.

- கண்ணன், கதிர் நகர். (படம் உண்டு)

ஒளிராத விளக்கு

திருப்பூர், பி.என்., ரோடு, மூம்மூர்த்தி நகர் பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- கிருபானந்தன், மும்மூர்த்தி நகர். (படம் உண்டு)

கழிவுநீரால் அவதி

திருப்பூர், முதல் வார்டு, இந்திரா நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- விக்னேஸ்வரன், இந்திரா நகர். (படம் உண்டு)

திருப்பூர், நெருப்பெரிச்சல் சாலையில் பாதி வரை மண் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். மண்ணை அகற்ற வேண்டும்.

- விஜி, நெருப்பெரிச்சல். (படம் உண்டு)

இதுவா சீரமைப்பு?

கருவம்பாளையம், மாகாளியம்மன் கோவில், நாதன் மாவு மில் விரிவு அருகே சாலை சரிந்து விடாமல் இருக்க, கற்கள் வைத்து அடுக்கப்பட்டுள்ளது. கற்களை அகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும்.

- ஆனந்தராஜா, கருவம்பாளையம். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருப்பூர், 39வது வார்டு, ஜெய் நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.

- ராஜா, ஜெய் நகர். (படம் உண்டு)

கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் வழியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.

- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு) திருப்பூர், 55வது வார்டு, தெய்வானையம்மாள் லே-அவுட் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- கோமதி, தெய்வானையம்மாள் லே-அவுட். (படம் உண்டு)

ரியாக் ஷன்

சுத்தமானது கால்வாய்

திருமுருகன்பூண்டி முதல் வார்டு, நெசவாளர் காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

- மனோகர், நெசவாளர ்காலனி. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us