/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 74 பேர் மனு
/
காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 74 பேர் மனு
PUBLISHED ON : ஜூலை 23, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 74 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், 3 உதவி கமிஷனர்கள், 5 ஆய்வாளர்கள் உட்பட 74 பேரிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை போலீஸ் கமிஷனர் அருண் பெற்றார்.
அதில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தன.
பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
முகாமில் கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.