/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
/
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

திருக்காட்டுப்பள்ளி:திருக்காட்டுப்பள்ளி அருகே, அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில், நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், 45; அ.தி.மு.க., கிளை செயலர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, பாலமுருகன் வீட்டில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதில், வீட்டின் சுவரில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பாலமுருகன் வெளியே வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் இருவர் டூ - வீலரில் தப்பினர்.
விசாரணையில், நாட்டு வெடிகுண்டை மர்ம நபர்கள் வீட்டில் வீசிச் சென்றது தெரிந்தது. இதில், பாலமுருகனுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரிக்கின்றனர்.