sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 மயானத்திற்கு பாதை வசதி கேட்டு அபிராமிபுரம் கிராம மக்கள் மறியல்

/

 மயானத்திற்கு பாதை வசதி கேட்டு அபிராமிபுரம் கிராம மக்கள் மறியல்

 மயானத்திற்கு பாதை வசதி கேட்டு அபிராமிபுரம் கிராம மக்கள் மறியல்

 மயானத்திற்கு பாதை வசதி கேட்டு அபிராமிபுரம் கிராம மக்கள் மறியல்


PUBLISHED ON : நவ 16, 2025 01:51 AM

Google News

PUBLISHED ON : நவ 16, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அபிராமிபுரம் கிராமத்தில், மயானத்திற்கு செல்ல பாதை வசதி கேட்டு, கிராம மக்கள் நேற்று, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியம், மொறப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அபிராமிபுரம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, கிராமத்தின் அருகே மயானம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், மயானத்திற்குச் செல்ல உரிய பாதை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பல ஆண்டுகளாக, தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் வழியே, உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

தற்போது, அந்த தனியார் நிலத்தின் உரிமையாளர், நிலத்தை விற்பனை செய்த நிலையில், அங்கு வீட்டு மனைகள் ஏற்படுத்தப்பட்டு, சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று, அபிராமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்த நிலையில், அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மதுராந்தகம் -- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர், கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர்.

இதில், சுமுக முடிவு எட்டப்பட்டதால், மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us