sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

காஞ்சி ஹயக்ரீவர் சன்னிதியில் 'அ, ஆ...' எழுதிய குழந்தைகள்

/

காஞ்சி ஹயக்ரீவர் சன்னிதியில் 'அ, ஆ...' எழுதிய குழந்தைகள்

காஞ்சி ஹயக்ரீவர் சன்னிதியில் 'அ, ஆ...' எழுதிய குழந்தைகள்

காஞ்சி ஹயக்ரீவர் சன்னிதியில் 'அ, ஆ...' எழுதிய குழந்தைகள்


PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், விஜயதசமியையொட்டி, காஞ்சிபுரம் லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதியில், 'வித்யாரம்பம்' எனும், குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில், லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதி உள்ளது. இங்கு விஜயதசமியையொட்டி நேற்று 'வித்யாரம்பம்' எனும், குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், நெல்மணிகளை தட்டில் பரப்பி அதில், கோவில் அர்ச்சகர், குழந்தைகளின் கையை பிடித்து, தமிழின் முதல் எழுத்துக்களான 'அ, ஆ' என எழுத சொல்லிக் கொடுத்து, அட்சதை துாவி ஆசிர்வதித்தார்.

அதிகாலையில் இருந்தே, குழந்தைகளுடன் வந்த பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் குழந்தைகளின் ஆரம்ப கல்விக்கு அடித்தளம் அமைத்தனர்.

முன்னதாக, கல்விக் கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், மாணவ - மாணவியர் பாடபுத்தகம், நோட்டு புத்தகம், பேனா, பென்சில், கரும்பலகையை சுவாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us