sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில் முட்புதர்வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில் முட்புதர்வாகன ஓட்டிகள் கடும் அவதி

நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில் முட்புதர்வாகன ஓட்டிகள் கடும் அவதி

நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில் முட்புதர்வாகன ஓட்டிகள் கடும் அவதி


PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, நெரூர் - திருமுக்கூடலுார் சாலையின், இருபுறமும் செடிகள் முளைத்து முட்புதராக காட்சியளிக்கிறது. இதனால், சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம், நெரூர் - திருமுக்கூடலுார் செல்லும் சாலையில், புதுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகள் உள்ளன.

மேலும், காவிரியாற்றுடன், அமராவதி ஆறு இணையும் இடமான, திருமுக்கூடலுாரில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. அதற்கு, பிரதோஷம், கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனுார் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

ஒருபக்கம் காவிரியாறு, மறுபக்கம் விவசாய நிலம் உள்ள, நெரூர்-திருமுக்கூடலுார் சாலையின் ஒரத்தில், மழை காரணமாக செடிகள் அதிகளவில் முளைத்து முட்புதராக மாறி, சாலையை மறைத்துள்ளது.

மேலும், நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில், இரவு நேரத்தில் மின் விளக்குகளும் சரிவர எரிவது இல்லை. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் சாலையில் செல்வதை கூட, கவனிக்க முடியவில்லை. வாகன ஓட்டிகளுக்கு சாலை தெரியாமல், விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

எனவே, கரூர் அருகே நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில், உள்ள செடிகளை அகற்றி, மின் விளக்குகள் அனைத்தும் எரியும் வகையில், நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம பஞ்சாயத்துக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us