PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், அண்ணா நகர், சாந்தி காலனியில், சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன் எனும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.
மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, அறை எண்: 312ல் 'சுவிட்ச்' போர்டில் தீபிடித்து கரும்புகை வெளியேறியது.
அந்த அறையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த கோகுல் என்பவர், இதுகுறித்து அருகில் இருந்த உதவியாளர்கள் வாயிலாக, பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த, மருத்துவமனை பணியாளர்கள், அறையில் இருந்த தீயணைப்பானை பயன்படுத்தி தீயை அணைத்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.