தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ துபாயில் இருந்து கடத்திய ரூ.1.2 கோடி தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திய ரூ.1.2 கோடி தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திய ரூ.1.2 கோடி தங்கம் பறிமுதல்


PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, துபாயில் இருந்து சென்னைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் அதிகாலை 2:00 மணிக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணியரின் உடைமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் சுற்றுலா விசாவில் சென்று திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். அவர் வைத்திருந்த உடைமைகளை சோதித்தபோது எதுவும் சிக்கவில்லை. அவர் கையில் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார். பாட்டிலை திறந்து பார்த்ததில் தங்க பசைகள் கடத்தியது தெரியவந்தது. அதன் எடை 1.5 கிலோ. சர்வதேச மதிப்பு 1.23 கோடி ரூபாய் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us