/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சிறுமிக்கு தொல்லை தலைமையாசிரியர் போக்சோவில் கைது
/
சிறுமிக்கு தொல்லை தலைமையாசிரியர் போக்சோவில் கைது
PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு அரசு தொடக்க பள்ளியில், 15 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் தலைமையாசிரியர், மூன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம், கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்த பின், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். இதையடுத்து, 'போக்சோ'வில் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.