/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கான்கிரீட் பெயர்ந்த காஞ்சிவாக்கம் பள்ளி கூரை
/
கான்கிரீட் பெயர்ந்த காஞ்சிவாக்கம் பள்ளி கூரை
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டட கூரை கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து உடைந்து உள்ளது. நேற்று முன்தினம் முதல், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையினால், சேதமடைந்துள்ள கான்கிரீட் பெயர்ந்த பகுதி, மழைநீரில் நனைந்து மேலும் உதிர்ந்து வருகிறது.
எனவே, மாணவ - மாணவியரின் நலன் கருதி, கோடை விடுமுறையில், சேதமான பகுதிகளை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.