PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் லட்சுமி, 30. நேற்று முன்தினம், இவர் வீட்டில் இல்லாத போது, பூட்டை உடைத்து டி.வி., மற்றும் ஐந்து குத்து விளக்குகள் திருடப்பட்டன.
புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த விக்கி, 24, உதயா, 25, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
நேற்று, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.