sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

தென் கிழக்கு ஆசியாவில் காணப்படும் 'மலாய் குருகு' பறவை முதன் முறையாக திருப்பூரில் அகப்பட்டது

/

தென் கிழக்கு ஆசியாவில் காணப்படும் 'மலாய் குருகு' பறவை முதன் முறையாக திருப்பூரில் அகப்பட்டது

தென் கிழக்கு ஆசியாவில் காணப்படும் 'மலாய் குருகு' பறவை முதன் முறையாக திருப்பூரில் அகப்பட்டது

தென் கிழக்கு ஆசியாவில் காணப்படும் 'மலாய் குருகு' பறவை முதன் முறையாக திருப்பூரில் அகப்பட்டது


PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,:தென் கிழக்கு ஆசியாவில் அதிகம் தென்படும் 'மலாய் குருகு' பறவை, முதன் முறையாக திருப்பூரில் தென்பட்டது; அவற்றை மீட்ட வனத்துறையினர், நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் விட்டனர்.திருப்பூர், நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஆண்டுக்கு, 186 வகை பறவையினங்கள் வந்து செல்கின்றன.

இதில், திருப்பூர், வீரபாண்டி கிராமம், காளி குமாரசாமி கோவில் அருகில், கொக்கு அடிபட்டு, வழி தவறி வந்து விட்டதாக, அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணன் உத்தரவில் வன ஊழியர்கள், அந்த பறவையை உயிருடன் மீட்டு, முதலுதவி சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தனர்.

அது, மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே அதிகம் தென்படும் 'மலாயன் நைட் ெஹரான்' எனப்படும் பறவை என்பது தெரிய வந்தது. அதை, நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்று விட்டனர்.

இது குறித்து, ரேஞ்சர் கூறியதாவது:தமிழகத்தை பொறுத்தவரை மலாயன் குருகு பறவை, கடந்த, 2018ல், துாத்துக்குடியில் தென்பட்டது. கடந்தாண்டு (2024) மார்ச் மாதம், நீலகிரி மாவட்டம் குஞ்சப்பனை; மே மாதம், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி லாங்வுட் சோலை; 2024 டிச., மாதம் மதுரையில் தென்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வந்து செல்லும் அரிதான பறவையான இது, தற்போது, திருப்பூரில் முதன் முறையாக பறவை தென்பட்டுள்ளது.

பொதுவாக தெற்காசியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பறவைகள், அவ்வப்போது இனப்பெருக்கத்துக்காக திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்வது வழக்கம்; அந்த வகையில், மலாயன் குருகு பறவையும் வந்திருக்கலாம்; திருப்பூருக்கு அதன் வருகை அரிது; புதிது என்பது, காலநிலை மாற்றத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us