PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொலை வழக்கில் ஆஜராகாதவர் கைது
சேலம், சேலம், அரியானுார் சிப்கோ நகரை சேர்ந்தவர் ராகுல்ராஜ், 34. கடந்த, 2018ல் அஸ்தம்பட்டியில் நடந்த கொலை வழக்கில், இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், சில மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது. இதையடுத்து, அஸ்தம்பட்டி போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அரியானுார் பகுதியில் ராகுல்ராஜை போலீசார் கைது செய்தனர்.