sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பெண் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது

/

பெண் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது

பெண் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது

பெண் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது


PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், குள்ளனுாரை சேர்ந்த வெண்ணிலா, 48, என்பவர், 'பியூட்டி பார்லர்' நடத்தி வருகிறார். அவரிடம், அதே பகுதியை சேர்ந்த சமீரா, 33, என்பவர், 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், அவரது கணவர் சிராஜ்தீன், 36, கார் டிரைவராக, மூன்றுஆண்டுகளாகவும் பணியாற்றினர்.

வெண்ணிலாவின் கணவர், 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், ஓராண்டிற்கு முன், மாரிகிருஷ்ணன் என்பவரை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மாரிகிருஷ்ணனிடம், வெண்ணிலா பற்றி, தவறாக சிராஜ்தீன் கூறினார்.

சிராஜ்தீனை, வெண்ணிலா தட்டிக்கேட்டார். அதையடுத்து, சிராஜ்தீன், சமீரா இருவரையும், வேலையை விட்டு வெண்ணிலா நிறுத்தினார்.

அந்த ஆத்திரத்தில், சிராஜ்தீன், 'பியூட்டி பார்லரில், நீ நிர்வாணமாக இருந்ததை, நான் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அதை, சமூக வலைதளத்தில் பரப்புகிறேன்' என, மிரட்டல் விடுத்தார். வெண்ணிலா புகாரில், போச்சம்பள்ளி போலீசார், சிராஜ்தீனை நேற்று காலை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us