sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மோசடியாக ரூ.32 லட்சம் நிலம் விற்க முயன்றவர் கைது

/

மோசடியாக ரூ.32 லட்சம் நிலம் விற்க முயன்றவர் கைது

மோசடியாக ரூ.32 லட்சம் நிலம் விற்க முயன்றவர் கைது

மோசடியாக ரூ.32 லட்சம் நிலம் விற்க முயன்றவர் கைது


PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை, திடீர் நகரைச் சேர்ந்தவர் கணேசன், 67, தங்கும் விடுதி மேலாளர். பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள இவரது விடுதியில், சிவகாசி நந்தவனத்தைச் சேர்ந்த சரவணன், 46, என்பவர், வழக்கறிஞர் என கூறி அடிக்கடி தங்கினார்.

தனக்கு பல அதிகாரிகளை தெரியும் எனக் கூறியவர், மதுரை, வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் வீட்டு வசதி வாரிய கட்டுப்பாட்டில் உள்ள, 6 சென்ட் இடத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.

அரசு இடம் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றார். அதை நம்பி, 42,000 ரூபாயை கணேசன் கொடுத்தார்.

இந்நிலையில், சரவணன் ஏற்பாட்டில் சர்வேயர் என கூறிக் கொண்டு, கணேசனை தொடர்பு கொண்ட பிரசன்னா, சசிகுமார் ஆகியோர் பல்வேறு கட்டமாக 32 லட்சம் ரூபாய் பெற்றனர். ஆனால், இடத்தை வாங்கி தராமல் சரவணன் மோசடி செய்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் கணேசன் புகார் அளித்தார். இவ்வழக்கில் சரவணன் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரை தேடி வருகின்றனர். சரவணனிடமிருந்து பச்சை மை, போலி 'சீல்' உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us