PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

மழைநீர் தேக்கம் அமராவதி நகர், அமராவதிபாளையம் பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. மழைக்காலத்தில் நீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். - குமார், அமராவதிபாளையம். n தேசிய நெடுஞ்சாலை அருகில், பல்லகவுண்டன்பாளையம் ரோட்டில் நடுரோட்டில் உள்ள குழியில் குளம் போல் மழைநீர் தேங்குகிறது. - இளவரசன், பல்லகவுண்டன்பாளையம். குடிநீர் வீண் ஜெய்வாபாய் பள்ளி வீதியில் சூசையாபுரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகிறது.
- வின்சென்ட் ராஜ், சூசையாபுரம். குவிந்த குப்பைகள் மாநகராட்சி, 26வது வார்டு, கொங்கணகிரி பிரேமா பள்ளி முதல் வீதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. - பழனிசாமி, கொங்கணகிரி. n ஜெய்வாபாய் பள்ளி பகுதியில் திடக்கழிவுகள் அகற்றப்படாததால் துர்நாற்றம், உடல்நலக்கேடு ஏற்படுகிறது. - பாலசண்முகம், குமரன் ரோடு. சுகாதாரக் கேடு சிறுபூலுவபட்டி, அம்மன் நகர் முதல் வீதியில் தனியார் நிறுவன கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. - கார்த்தி, சிறுபூலுவபட்டி.

