PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்களுக்கு நல உதவி வழங்கல்
ஊத்தங்கரை, டிச. 10-
ஊத்தங்கரையில், பெஞ்சல் புயலால் வரலாறு காணாத கன மழையால் அண்ணா நகர், காமராஜ் நகர், ஜீவா நகர், நேரு நகர் ஆகிய பகுதி வீடுகளில் மழை நீர் புகுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பாக நல உதவிகளை மண்டல தலைமை அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை வங்கி கிளை மேலாளர் மகேஷ்பாபு மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் வழங்கினர்.

