தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தமிழக அரசின் தலைமை ஹாஜி காலமானார்

தமிழக அரசின் தலைமை ஹாஜி காலமானார்

தமிழக அரசின் தலைமை ஹாஜி காலமானார்


PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,:தமிழக அரசின் தலைமை ஹாஜி சாலாவுதீன் முகமது அயூபக் சாகிப், நேற்று வயது மூப்பின் காரணமாக காலமானார்.

தமிழக அரசின் தலைமை ஹாஜி சாலாவுதீன் முகமது அயூபக் சாகிப், 84. இவர், நேற்று வயது மூப்பின் காரணமாக காலாமானார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தலைமை ஹாஜியாக இருந்தவர்.

அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., - பி.எச்.டி., பட்டங்களை பெற்ற இவர், ஹாஜியாக நியமிக்கப்படுவதற்கு முன் சென்னை நியூ கல்லுாரியில் அரபுப் பேராசிரியராக இருந்தார்.

தமிழகத்தில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதியை தலைமை ஹாஜியான இவரே அறிவிப்பார். அவரது மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்ட இரங்கல் அறிக்கையில், 'ஹாஜியின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியான அவர், தன் சமூக சேவைக்காக நினைவுகூரப்படுவார். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us