PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி, சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதினார். நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், விரக்தியில் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த மாணவி, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

