sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

சாலையோர தடுப்புகள் சேதம் சீரமைக்கு பணி எப்போது?

/

சாலையோர தடுப்புகள் சேதம் சீரமைக்கு பணி எப்போது?

சாலையோர தடுப்புகள் சேதம் சீரமைக்கு பணி எப்போது?

சாலையோர தடுப்புகள் சேதம் சீரமைக்கு பணி எப்போது?


PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சோழவரம் அடுத்த தேவனேரி, செம்புலிவரம், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் சேதமடைந்துள்ளன.

இந்த தடுப்புகள் கனரக வாகனங்கள் மோதி சேதமான நிலையில், கால்நடைகள், இந்த வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

மேலும், ஆத்துார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோரும், மது போதையில் சேதமடைந்த தடுப்புகள் வழியாக, தள்ளாடியபடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இதனால், விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

கால்நடைகள், பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க கூடாது என்பதற்காகவே, இணைப்பு சாலைகளின் ஓரங்களில் தடுப்புகள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது, அவை ஆங்காங்கே சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும், அவர்களது வாகனங்கள் எந்தவொரு இடையூறும் இன்றி பயணிக்கவும், சேதமடைந்த இரும்பு தடுப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us