PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக இன்டர்நெட் தினம்
இன்றைய உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 'இன்டர்நெட்' பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு வேலைகளை செய்ய முடிகிறது. 1969 அக். 29ல் கலிபோர்னியா பல்கலை மாணவர் சார்லி கிளைன் ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொன்றுக்கு மின்னணு செய்தி அனுப்பினார். இதை நினைவுபடுத்துதல், இன்டர்நெட்டை பயனுள்ள வகையில் பயன்படுத்த வலியுறுத்தி அக். 29ல் உலக இன்டர்நெட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அப்போது இன்டர்நெட்டுக்கு 'அர்பாநெட்' என பெயர். உலகில் 530 கோடி பேர் 'இன்டெர்நெட்' பயன்படுத்துகின்றனர்.