PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியலில் பெண்கள்
அறிவியலில் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப்.11ல் அறிவியலில் பெண்கள், மாணவிகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் துறையில் பாலின வித்தியாசத்தை குறைப்பது இத்தினத்தின் நோக்கம். 'அறிவியல் தலைமைத்துவத்தில் பெண்கள் - நிலைத்தன்மைக்கான புதிய சகாப்தம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சர்வதேச அளவில் ஆராய்ச்சியில் 33.3 சதவீதம், இன்ஜினியரிங்கில் 28 சதவீதம், கம்ப்யூட்டர், ஐ.டி., துறையில் 40 சதவீதம் மட்டுமே பெண்கள்
உள்ளனர். இது அதிகரிக்கப்பட வேண்டும்.

