PUBLISHED ON : மார் 04, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய பாதுகாப்பு தினம்
தேசிய பாதுகாப்பு கவுன்சில் 1966 மார்ச் 4ல் உருவாக்கப்பட்டது. இதன் நினைவாக 1972 முதல், தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 4ல் தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நிதி, வருவாய் இழப்பு, சுகாதார பிரச்னை உட்பட பல பிரச்னைகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றி இத்தினம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. விபத்து, தொழில்சார் நோய்கள் தேசிய பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்துகிறது. அவை மரணம், உடல் குறைபாடு, பொருள் சேதம், என சமூக சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.