PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக அகிம்சை தினம்
காந்தியின் அகிம்சை கொள்கை தான் இன்றைய உலகுக்கு தேவை. ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தில் கடைசி வரை அறவழி போராட்டத்தில் உறுதியாக இருந்து சுதந்திரம் கிடைக்க பாடுபட்டார். வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்த இவர் விவசாயிகளின் வறுமையை பார்த்து அரையாடை மனிதராக மாறினார். இது அவரை மகாத்மாவாக உயர்த்தியது. கொல்லாமை, துன்புறுத்தாமையை அடிப்படையாகக் கொண்ட அகிம்சை தத்துவத்தை பின்பற்றிய இவரது பிறந்த தினமான அக்., 2, ஐ.நா., சார்பில் உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.