PUBLISHED ON : நவ 13, 2025 08:34 PM

அ நிறம் | அளவு
உலக கருணை தினம்
ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கப்பட்ட கருணை அமைப்பு சார்பில் 1998 முதல் நவ. 13ல் உலக கருணை தினம் கடைபிடிக்கப்படுகிறது. கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். இதன் காரணமாகவே மகிழ்ச்சியாக இருப்பதை போலவே கருணை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இரக்க உணர்வோடு இருப்பது நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மைகளை கொடுக்கக்கூடியது. நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவவேண்டும்.
