PUBLISHED ON : பிப் 21, 2026 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக தாய்மொழி தினம்
ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. தாய்மொழியின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் பிப்.21ல் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பன்மொழிக் கல்வி குறித்த இளைஞர்களின் குரல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) 1952ல் உருதுக்கு பதில் வங்காளத்தை ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடி உயிர்நீத்த டாக்கா பல்கலை மாணவர்கள் நினைவாக 1999ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

