PUBLISHED ON : மார் 25, 2026 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக ஊதா தினம்
உலகில் 6.5 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர நாடுகளில் உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் 1 முதல் 1.5 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளை நரம்பியல் செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பால் வலிப்பு ஏற்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 26ல் உலக ஊதா தினம் கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையளித்தால், அதில் இருந்து மீள முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

