PUBLISHED ON : ஏப் 02, 2026 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'234' ஆன கதை
1952ல் நடந்த மெட்ராஸ் மாகாண (ஆந்திரா, கேரளாவின் சில பகுதிகள் உட்பட) தேர்தலில் 375 தொகுதிகள் இருந்தன.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபின் 1957ல் மெட்ராஸ் மாநில தேர்தலில் 205, 1962ல் 206 ஆனது. 1963ல் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி லோக்சபா தொகுதி 39 ஆனது. ஒரு லோக்சபாவுக்கு 6 சட்டசபை என 234 தொகுதிகளாக மாற்றம் செய்யப் பட்டது. 1967ல் இருந்து 234 தொகுதிகளானது. மாநிலத்தின் பெயர் 1969 ஜன.14ல் தமிழ்நாடு ஆனது. 1971ல் முதன்முதலாக தமிழ்நாடு பெயரில் தேர்தல் நடந்தது.

