PUBLISHED ON : ஏப் 24, 2026 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்
இந்தியாவில் கிராமங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்பு தங்களின் தேவை, வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழிவகுக்கிறது. 1993 ஏப். 24ல் இச்சட்டம் அமலுக்கு வந்ததை நினைவுபடுத்தும் விதமாக ஏப். 24ல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்க படுகிறது. இந்தியாவில் சுமார் 2.55 லட்சம் கிராம ஊராட்சி, 6904 ஊராட்சி ஒன்றியம், 66 மாவட்ட ஊராட்சி என 2.62 லட்சம் ஊரக உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.

