உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 29, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
தேசிய புள்ளியியல் தினம்
இந்திய புள்ளியியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் புள்ளியியல் அறிஞர் பிரசந்த சந்திர மகிலனோபிஸ். 1893 ஜூன் 29ல் கோல்கட்டாவில்பிறந்தார். 1931ல் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை தொடங்கினார். இது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வடிவமைக்க, கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு ஒரு சிறந்த ஆலோசனை மையமாக திகழ்கிறது. புள்ளி விபரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகிலனோபிஸ் சாதனையை அங்கீகரிக்கும்விதமாக அவரது பிறந்த தினமான ஜூன் 29, தேசிய புள்ளியியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
