PUBLISHED ON : ஜூன் 04, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
குழந்தைகள் பாதுகாப்பு தினம்
போர்களால் பாதிக்கப்படும் அப்பாவி குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஜூன் 4ல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. துவக்கத்தில் 1982 லெபனான் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது கவனம் செலுத்தியது. பின் ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறையால் உடல், மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 2023ஐ விட, 2024ல் ஏற்பட்ட போர்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 25சதவீதம் அதிகம் என ஐ.நா., தெரிவித்துள்ளது.
