PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ஹிரோஷிமா தினம்
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945 ஆக., 6ல், அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 60 கிலோ எடைமிக்க 'லிட்டில்பாய்' எனும் அணுகுண்டை சுமந்து வந்த 'பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது. 4 சதுர மைல் சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். ஆக., 9ல் நாகசாகி மீது அடுத்த அணுகுண்டை வீசியது.