/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : வெள்ளையனே வெளியேறு தினம்
/
தகவல் சுரங்கம் : வெள்ளையனே வெளியேறு தினம்
PUBLISHED ON : ஆக 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
வெள்ளையனே வெளியேறு தினம்
மும்பையில் 1942 ஆக. 8ல் 'செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மகாத்மா காந்தி துவக்கி வைத்தார். இந்த வாசகம் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். லட்சக்கணக்கானோர் கைதாகினர். இனியும் இந்தியாவை ஆள முடியாது என்ற எச்சரிக்கையை இது ஆங்கிலேயருக்கு ஏற்படுத்தியது.