உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM
அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
விடுதலை போராட்டத்தில் 'சுதேசி'
'சுதேசி' பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேயருக்கு எதிராக உள்ளூர் பொருட்களை வாங்க வலியுறுத்தி 1905ல் 'சுதேசி இயக்கம்' தொடங்கப்பட்டது. இந்திய மக்களின் உள்நாட்டுத் தொழில், உற்பத்தியை ஊக்குவிப்பது, அதன் மூலம் பிரிட்டனின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கம். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக தான், வ.உ.சி., துாத்துக்குடியில் சுதேசி கப்பல் போக்குவரத்தைதொடங்கினார்.
