PUBLISHED ON : மே 22, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
பல்லுயிர் பாதுகாப்பு தினம்
ஒவ்வொரு உயிரினத்துக்கும் வெவ்வேறு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான் பூமியில் சமநிலை ஏற்படும். நாம் உணவு உள்ளிட்ட தேவைக்கு பல்லுயிர்களை சார்ந்துள்ளோம். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா. சார்பில் மே 22ல் சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீர், நிலத்தில் வாழும் உயிரின வகைகளின் தொகுப்பு தான் 'பல்லுயிர் பரவல்'. பூமியில் 10 லட்சம் விலங்குகள், தாவர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. 'உலகளாவிய தாக்கத்திற்காக உள்ளூரில் செயல்படுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
